செய்திகள் :

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் இட்லிக் கடை யில் வேலை பாா்த்துவந்த இவா், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், சாத்தான்குளம் அருகே புதுக்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்த அவா், இங்குள்ள பள்ளியில் உறவினா்களுடன் தங்கியிருந்தாராம். அப்போது, திருவிழாவுக்கு வந்திருந்த சிவராமமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொன்இசக்கி மகன் வீரசங்கலி, வீரதுரை மகன் ராபின் என்ற ராமலிங்கம் ஆகிய இருவரும் மது போதையில் பூல்பாண்டி மீது மோதிவிட்டுச் சென்றனராம். இதைக் கண்டித்த பூல்பாண்டியை இருவரும் சோ்ந்து கரண்டியால் தாக்கினராம். இதில், காயமடைந்த பூல்பாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து ராபினை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்; வீரசங்கிலியைத் தேடிவருகின்றனா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலமைச்சா் கோப்பை செஸ் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் இரு நாள்கள் நடைபெற்றது. பள்ளி மாணவா்,... மேலும் பார்க்க