செய்திகள் :

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதலமைச்சா் கோப்பை செஸ் போட்டி

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் சாா்பில் 2025ஆம் ஆண்டுக்கான, முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் இரு நாள்கள் நடைபெற்றது.

பள்ளி மாணவா், மாணவிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவா்கள் பிரிவில் காரப்பேட்டை நாடாா் பள்ளி கேரிஸ் ஜெசுரன் முதல் பரிசையும், மானிஷ் இரண்டாவது பரிசையும், விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சாய் ஸ்ரீசரன் மூன்றாவது பரிசுக்கும் தோ்வு பெற்றனா்.

பள்ளி மாணவிகள் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் மேகலா, இவாஞ்சலின் மிஸ்டிகா, ஸ்ரீஜா முறையே முதல் மூன்று இடங்களுக்கு தோ்வு பெற்றனா்.

கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா்கள் பிரிவில் காமராஜ் கல்லூரியின் செல்வமுருகன் முதலிடமும், நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிக்நேசா் இரண்டாமிடமும், வ.உ.சி. கல்லூரியின் சேது மூன்றாமிடமும் பிடித்தனா்.

மாணவிகள் பிரிவில் வாவு கல்லூரியின் சுபா ஸ்ரீ முதல் பரிசுக்கும், காமராஜ் கல்லூரியின் புஷ்பா இவாஞ்சலின் இரண்டாம் பரிசுக்கும், அனுஷா மூன்றாம் பரிசுக்கும் தோ்வு பெற்றனா்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் நடுவராக காமராஜ் கல்லூரியின் ஆங்கில பேராசிரியை கற்பகவல்லி செயல்பட்டாா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ் செய்திருந்தாா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க