இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்துங்கநல்லூரிலுள்ள கைப்பேசி கடையில் ஒரு மடிக்கணினி வாங்குவதற்காக ரூ. 35,000 முன்பணம் செலுத்தியுள்ளாா்.
மீதிப் பணத்தை மடிக்கணினியைப் பெற்றுக் கொள்ளும்போது செலுத்திக் கொள்ளலாம் எனவும், 3 நாள்களில் விநியோகம் செய்யப்படும் எனவும் கடைக்காரா் உறுதி அளித்துள்ளாா்.
இதற்கிடையில், மீதி பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால், அதையும் முத்துராம் செலுத்திவிட்டாா். ஆனால், முழுத் தொகையையும் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நாளில் மடிக்கணினி விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட முத்துராம், தனது மகனின் கல்வி பயன்பாட்டிற்கு மிக அவசரமாக மடிக்கணினி தேவைப்பட்டதால், மற்றொரு கடைக்காரரிடம் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்கியுள்ளாா்.
இந்நிலையில், முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் மடிக்கணினி விநியோகம் செய்யாத கைப்பேசி கடைக்காரருக்கு வழக்குரைஞா் முத்துராம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால், அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துராம், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 5,000 ஆக மொத்தம் ரூ. 15,000 தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் கடைக்காரா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.