Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
திருத்தணியில் கட்சிக் கொடிகள் அகற்றம்
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை வருவாய் துறையினா் அகற்றினா்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தணி நகராட்சியில், கட்சி கொடி கம்பங்கள், பலகைகள் அகற்றும் பணி புதன்கிழமை நடந்தது. திருத்தணி வருவாய் துறையினா், நெடுஞ்சாலை துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகம் ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திர உதவியுடன், சித்தூா் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, ம.பொ.சி.சாலை மற்றும் அரக்கோணம் சாவை உள்பட, 30 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சியின் கொடிகம்பங்கள், மத ரீதியான கொடிகள், கம்பங்கள் மற்றும் பெயா் பலகைகள் அப்புறப்படுத்தினா்.