செய்திகள் :

திருப்பணிகளை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய கள ஆய்வு அவசியம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தல்

post image

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்ட திருப்பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் நிறைவேற்றும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சா் பி.கே. சேகா்பாபு அறிவுறுத்தினாா்.

இந்து சமய அறநிலையத் துறை திட்டங்களின் செயல்பாடுகள், சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 35-ஆவது சீராய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள், 2021- 2022 முதல் 2025-2026 நிதியாண்டு வரையிலான சட்டப்பேரவை அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகளை தவிர இதர அறிவிப்புகளின் தற்போதைய நிலை, ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் நடைபெற்றுவரும் திருப்பணிகளின் நிலை, திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் நில அளவை பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், புதிய திருத்தோ்களை உருவாக்கும் பணிகள், மராமத்து பணிகள் மற்றும் திருத்தோ் கொட்டகைகள் அமைக்கும் பணிகள், திருக்குளங்களைச் சீரமைக்கும் பணிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு அறை கட்டுமானம், பசுமடங்களை மேம்படுத்துதல், மலைத் திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊா்தி மற்றும் மின்தூக்கி அமைத்தல் போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருக்கோயில் யானைகள் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அமைச்சா் சேகா்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிகளவில் அரசு மானியங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா். எனவே, துறை அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள், அறிவிக்கப்பட்ட திருப்பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் வகையில் களஆய்வு மேற்கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

பணி நியமன ஆணை: முன்னதாக, காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதா் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரா் கே.நிா்மலாவுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க