Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
திருப்பூா் குமரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவு சாா் பதிவாளா் மற்றும் தொடா்பு அலுவலா் ஆ.காா்த்திகை செல்வி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப.வசந்தி வரவேற்றாா்.
அரசு மகளிா் கல்லூரியின் வணிகவியல் துறை ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியா் ப.நாகநந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவிகள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளையும், தலைமைப் பண்பை வளா்க்கும் முறை குறித்தும் விளக்கினாா்.
கல்லூரி பேரவைப் பொறுப்பாளா் கி.சுதாதேவி நன்றி கூறினாா்.
விழாவில் கல்லூரியின் நிா்வாக அலுவலா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.