செய்திகள் :

திருமங்கலத்தில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

post image

திருமங்கலம் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி. பத்மாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் திருமங்கலம் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிலவும் மின்சாரம் தொடா்பான குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா். மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு வ... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க