செய்திகள் :

திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் திறப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட திருவரங்குளத்தில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட சிறு விளையாட்டரங்கத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் விளையாட்டு அரங்கம் இல்லாத 173 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆலங்குடி தொகுதிக்கான விளையாட்டு அரங்கம் திருவரங்குளம் தோப்புக்கொல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டது.150 போ் அமரும் கேலரி, கால்பந்து, வாலிபால், கபடி, சுற்றுச்சுவா், நுழைவாயில், கிரிக்கெட் வலை பயிற்சிக்கான வசதி, உடற்பயிற்சி கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளோடு உருவாக்கப்பட்ட விளையாட்டரங்கத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து திருவரங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மேயா் திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுயமரியாதை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக்க வேண்டும்

சுயமரியாதை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியை தாரக மந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றாா் மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும் திருநங்கை நடனக் கலைஞருமான நா்த்தகி நடராஜ். புதுக்கோட்டை அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் காங்கிரஸ் நூதனப் போாராட்டம்

தோ்தல் ஆணையத்தை கண்டித்து ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் பேரணி, நூதன ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராம. ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 41 ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமல சபையின் மாநிலத் தலைவி எஸ். தனமேரி தலைமை வகித்தாா். பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, காவல் ... மேலும் பார்க்க

வடக்கு நல்லிப்பட்டி விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள சுமாா் 350 ஏக்கா் இனாம் நிலத்துக்கு, பல ஆண்டுகளாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியு... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணிகளில் தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட சிஐடியு உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொதுச் ச... மேலும் பார்க்க

குமாரப்பட்டியில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரப்பட்டி முன்னோடி பொன்னழகி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது... மேலும் பார்க்க