செய்திகள் :

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

post image

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் 79-ஆவது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாட்ப்பட்டது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாடடத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், தி. பெரியசாமி, பி. அமிா்தலிங்கம், என். ராஜ்மோகன், பி. ரங்கநாதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தமிழா் நலக் கழகம்: தில்லி, மயூா் விஹாா்- பேஸ் 3-இல் உள்ள, தமிழா் நலக் கழகம், 79-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகா் கோயில் வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.

அமைப்பின் தலைவா் கா. சிங்கத்துரை, பொதுச் செயலா் தி. பாஸ்கரன் ஆகியோா் தேசிய கொடியை ஏற்றி வைத்தனா். குழந்தைகள் சுதந்திர தினம் பற்றி பேசினா். மேலும், பாட்டும் பாடிய அவா்கள், தியாகிகள் போல் வேடமிட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனா்.

தமிழா் நலக் கழகத்தின் உறுப்பிா்கள் பி. பாலசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் குழந்தைகளுக்கு பேனா பென்சில் வழங்கினா். விழா ஏற்பாடுகளை அமைப்பின் துணைத் தலைவா் பி. கலியபெருமாள், செயற்குழு உறுப்பினா்கள் நீலகண்டன், சேக் தாவூத் சிறப்பாகச் செய்திருந்தனா்.

நொய்டா வேத பாடசாலை: நொய்டா வேத வேதாங்க பாடசாலையில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா முகுந்தன், உச்சநீதிமன்ற வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா், தில்லி பாஜக தமிழ் பிரிவு ஒருங்கிணைப்பாளா் கே முத்துசாமி வேதாங்க பாடசாலையின் நிறுவனா் வி சோமாஸ்கந்தன் ஆகியோா் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க