செய்திகள் :

தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500

post image

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி என முதல்வர் ரேகா முதல்வர் பேரவையில் அறிவித்துள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் பேரவையில் இன்று(மார்ச் 25) தாக்கல் செய்யப்படுகிறது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. முதல்வர் ரேகா குப்தா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன்படி, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி எனவும் இது கடந்த ஆண்டு பட்ஜெட்டைவிட 31.5% அதிகமாகும் என்றும் கூறினார். மேலும் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிக்க | பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!

முந்தைய அரசு தில்லி வளர்ச்சியில் தோல்வியடைந்துள்ளது. யமுனை அசுத்தமாக இருந்தது. சாலை சேதமடைந்து இருந்தது காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது, தில்லி நிர்வாகம் நஷ்டத்தில் இருந்தது. இத்தகைய அரசை நடத்துவது சவாலானததான்

ஆனால் பாஜக அரசு, உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர், மின்சாரம் மற்றும் சாலை மேம்பாடு உள்ளிட்ட 10 முக்கிய துறைகளை மையமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் ரூ. 15,000 கோடியாக இருந்த மூலதனச் செலவு இந்த ஆண்டு ரூ. 28,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 5,100 கோடி, இதன் மூலமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக தில்லி முழுவதும் 50,000 சிசிடிவி கேமெராக்கள் பொருத்தப்படும்.

பிரதம மந்திரி ஜன் தன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துக்கு ரூ. 2144 கோடி

100 அடல் கேன்டீன்கள் நிறுவ ரூ. 100 ஒதுக்கீடு

போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு" என்று அறிவித்துள்ளார்.

சமாஜவாதி எம்.பி. வீடு மீதான தாக்குதல்: காவல் துறை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜி லால் சுமனின் வீடு மீதான தாக்குதல் சம்பவத்தில், நூற்றுக்கணக்கானோா் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் மீது காவல் துறை... மேலும் பார்க்க

வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமா் மோடி கடிதம்

வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். வங்கதேச தேசிய தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெர... மேலும் பார்க்க

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைம... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா். இடைவிடாத துப்பாக்கிச் ச... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மா... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு: தன்கா் நடவடிக்கை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை நிராகரித்தாா். ‘அமித் ஷா விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை; அவையில் அவா்... மேலும் பார்க்க