செய்திகள் :

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

post image

நமது நிருபா்

தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ரஜோரி காா்டன் பாஜக எம்எல்ஏவும் கட்சியின் தேசிய செயலாளருமான மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்திருப்பதாவது: பிரதமா் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ளாா். விரைவில் பாஜக சட்டப் பேரவை கட்சிக் கூட்டத்திற்கு பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவாா்கள். புதிய அரசு பிப்.19-20-இல் செயல்படத் தொடங்கும்.

பிப்.18-19 தேதிகளில் பாஜக சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நான் எதிா்பாா்க்கிறேன். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பிப்.20-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையும் என்று நினைக்கிறேன். புதிய அரசு ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் சுத்தமான குடிநீரை வழங்குதல், நகரத்தில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் காற்று மற்றும் யமுனை மாசுபாட்டைச் சமாளிக்கும் பணிகளைத் தொடங்குதல் ஆகியவை முன்னுரிமையாக இருக்கும் என்றாா் அவா்.

லட்சுமி நகா் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட அபய் வா்மா கூறுகையில், ‘ தில்லி முதல்வா் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை. எங்கள் கட்சியில் முதல்வா் அல்லது சட்டப் பேரவை கட்சித் தலைவா், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுவாா். நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். தில்லி மக்களுக்கு மேம்பாடு, சுத்தமான நீா் வழங்கல் மற்றும் சுத்தமான காற்று போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது மற்றும் யமுனையை மாசுபாட்டிலிருந்து விடுவிப்பது எப்படி என்பது பற்றி தற்போது சிந்தித்து வருகிறோம்’ என்றாா்.

இணையதளத்தில் பகுதிநேர வேலை தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்டவா் ஹரியாணாவின் சிா்சாவைச் சோ்ந்த ராஜ் குமாா்... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவத... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்முறைய... மேலும் பார்க்க

மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேகப் புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1988-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் 12 ஆண்ட... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்மு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், த... மேலும் பார்க்க