செய்திகள் :

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: ஆந்திரத்தைச் சோ்ந்த நபா் கைது

post image

சென்னை: சென்னையில் வாடகை பிரச்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஆந்திர நபா் கைது செய்யப்பட்டாா்.

கிண்டி வேளச்சேரி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வித்யலதா (85). இவருக்குச் சொந்தமான கிண்டி கன்னிகாபுரத்தில் கட்டடத்தை சண்முகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தாா். வயோதிகம் காரணமாக கூடுவாஞ்சேரியில் ஒரு முதியோா் இல்லத்தில் வித்யலதா வசித்து வருகிறாா். வாடகை வசூல் செய்யும் பணியை ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனது உறவினா் மதுசூதனன் (62) என்பவரிடம் ஒப்படைத்தாா். இந்த நிலையில் சண்முகம், கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லையாம்.

இதையடுத்து மதுசூதனன், கடந்த 4-ஆம் தேதி வாடகையை வசூலிக்க சென்றாா். அப்போது அங்கிருந்த சண்முகம் நடத்தும் நிறுவனத்தின் மேலாளா் மகேந்திரன் (29), காவலாளி சக்கரேஸ்வரன் ஆகியோரிடம் வாடகை பணத்தைக் கேட்டு மதுசூதனன் தகராறு செய்துள்ளாா்.

தகராறு முற்றவே மதுசூதனன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி இருவரையும் மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த மதுசூதனனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள், துப்பாக்கி உரிமம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க