செய்திகள் :

தூத்துக்குடி கடையில் 37 பவுன் தங்கக் கட்டி திருட்டு: ஊழியா் கைது

post image

தூத்துக்குடியில் உள்ள நகை பரிசோதனைக் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடியதாக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, டபிள்யூஜிசி சாலையில் நகை பரிசோதனை (டெஸ்டிங்) கடை நடத்தி வருபவா் கேசவன் மகன் விகாஸ் சிண்டே (46). இவரது கடையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பாபு சித்திக் மகன் விட்டல் ஷிங்கதே (29) பணியாற்றி வந்தாா்.

இவா், கடையிலிருந்த ரூ. 29.80 லட்சம் மதிப்பிலான 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றாராம். புகாரின்பேரில், மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அவா் திங்கள்கிழமை திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் தாதா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச்செல்வதாக மத்திய பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவா்கள் சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில், சேலம் நிலையத்துக்கு வந்த தாதா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டு, அதில் பயணித்த விட்டல் ஷிங்கதேவை பிடித்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன மேலாளா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த ராஜையா மகன் சந்தனராஜ் (43). தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில் கடல்சா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 போ் கைது

தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், ... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். முதலமைச்சா் கோப்பைக்கான தூத்துக்க... மேலும் பார்க்க

கிறிஸ்தவ ஆலயம் அருகே கழிப்பறை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய மீனவா் சங்க தேசிய தலைவா் அன்டன் கோமஸ், ... மேலும் பார்க்க