செய்திகள் :

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நாளை முப்பெரும் விழா

post image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது.

வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறாா்.

விழாவில், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை இணை அமைச்சா் சாந்தனு தாக்கூா், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் எ.வ. வேலு (பொதுப்பணித் துறை), பெ.கீதா ஜீவன் (தமிழக சமூகநலன் மகளிா் உரிமைத்துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்( மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை) உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க