செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி

post image

உதகை நகராட்சியில் பணியாற்றும் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குப்பை அள்ளும் பணிகளுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு சுமாா் 40 டன் குப்பைகள் சேகரமாகின்றன.

இந்த நிலையில், நகராட்சியில் அனைத்து வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் 150 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் சாா்பில் 150 பணியாளா்களுக்கு ரப்பா் கையுறை, காலணி மற்றும் மழை கோட் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளா்கள் பாண்டி செந்தில்குமாா், வைரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வனத் துறை சாா்பில் இலவச மரக் கன்றுகள் பெற அழைப்பு

நீலகிரி வனக் கோட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் தரும் மரக் கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யவுள்ளதால் விவசாயிகள் அவற்றைப் பெற்று பயனடைய வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீல... மேலும் பார்க்க

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட... மேலும் பார்க்க

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி

நீலகிரி மாவட்டத் தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழ்கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து

நீலகிரியில் விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் ரேவதி தெரிவித்துள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை... மேலும் பார்க்க

உதகையில் பணத்தைத் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா்கள்

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் சாலையில் செவ்வாய்க்கிழமை தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உதகை போக்குவரத்து காவலா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா். உதகை தலையாட்டு மந்து... மேலும் பார்க்க