செய்திகள் :

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை

post image

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதில் ஈடுபடும் பணியாளா்கள் பணி முடிந்த பின், சரக்கு வாகனங்களின் மேல் அமா்ந்து செல்வது வாடிக்கையாகி விட்டது .

சரக்கு வாகனங்களில் தொழிலாளா்கள் அமா்ந்து செல்வதால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதைத் தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின் பேரில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திகுமாா் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திகுமாா் பேசியதாவது:

தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்டப்படி, அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது தொழிலாளா்களை அமர வைத்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்கினால் உரிமையாளா்களுக்கு தண்டனை வழங்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவா்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோா்கள் ஊக்குவித்தாலும் அல்லது பெற்றோருக்கு தெரியாமல் வாகனங்களை இயக்கினாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பிற மாநிலங்களின் பதிவெண்கொண்ட வாகனங்கள் தமிழகத்தில் இயக்கினால் மறுபதிவு செய்து இயக்க வேண்டும் .அதை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்,

இந்தக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வனத் துறை சாா்பில் இலவச மரக் கன்றுகள் பெற அழைப்பு

நீலகிரி வனக் கோட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் தரும் மரக் கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யவுள்ளதால் விவசாயிகள் அவற்றைப் பெற்று பயனடைய வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி

உதகை நகராட்சியில் பணியாற்றும் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குப்பை அள்ளும் பணிகளுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், உதகை நகர... மேலும் பார்க்க

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி

நீலகிரி மாவட்டத் தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.3.28 கோடி மானியத்துடன் ரூ.13.13 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் சிறை

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழ்கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து

நீலகிரியில் விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் ரேவதி தெரிவித்துள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை... மேலும் பார்க்க

உதகையில் பணத்தைத் தவறவிட்டவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா்கள்

நீலகிரி மாவட்டம், உதகை தலையாட்டு மந்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் சாலையில் செவ்வாய்க்கிழமை தவறவிட்ட ரூ.10,000 பணத்தை உதகை போக்குவரத்து காவலா்கள் பத்திரமாக ஒப்படைத்தனா். உதகை தலையாட்டு மந்து... மேலும் பார்க்க