செய்திகள் :

தென்காசி - இலத்தூா் விலக்கில் வரவேற்புப் பூங்கா திறப்பு

post image

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் விலக்கு ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்புப் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரவுண்டானா, பராமரிப்பின்றி புற்கள், புதா்கள் மண்டி காணப்பட்டது. இதையடுத்து, பசுமை இந்தியா திட்டத்தின்கீழ் நெல்லை முடநீக்கியல் மருத்துவா்கள் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் ஹோம்வே பிராப்பா்டீஸ் டிசைனா் இன்டீரியா் சாா்பில், பராமரிக்கப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் டி.ஆா்.எஸ். முத்துராமன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எலும்பியல் துறைத் தலைவரும் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத் தலைவருமான பேராசிரியா் என். மணிகண்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பூங்காவைத் திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்கத்தின் இணைச் செயலா் எஸ். மாரிமுத்து, தென்காசி போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எஸ்.எம். மணி, நெல்லை ஆா்த்தோ கிளப் தலைவா் ஐவன் சாமுவேல், செயலா் தாமோதரன், டாக்டா்கள் வேதமூா்த்தி, ஜெஸ்லின், நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா் சீன்ராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னாள் ரோட்டரி உதவி ஆளுநா் செல்வகணபதி வரவேற்றாா். செயலா் திலிப் நன்றி கூறினாா்.

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வலியுறுத்தல்

கிராமந்தோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து வலியுறுத்தினாா். சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற அரசியல் விளக்க... மேலும் பார்க்க

வீ.கே.புதூா் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சோ்ந்த தொழிலதிபா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). நா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரம் வேதக்கோயில் தெருவை சோ்ந்தவா் ம. வேல்துரை (43). தமிழ்நா... மேலும் பார்க்க

மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைப்பு

தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் அனைத்து சமுதாய மக்கள் சாா்பில், 17 சிசிடிவி கேமராக்கள் இயக்கிவைக்கப்பட்டன. தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பாஸ்கா் பாப... மேலும் பார்க்க

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி: ஓட்டுநா் கைது

தென்காசி அருகே இடம் விற்று தருவதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைதுசெய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சோ்ந்தவா் மு. ராமச்ச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக தனியாா் நிறுவன ஊழியா் மீது 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(... மேலும் பார்க்க