செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

post image

தென்காசி மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த மனு:

தென்காசி மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். தென்காசி மாவட்டத்தில் 46 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், இடுபொருள்கள் விற்பனை செய்யப்படும். பயிா் கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் தொகையில் 10 சதவீதம் உரங்களாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களில் உரம் இல்லாததால், விவசாயிகள் தனியாா் கடைகளில் அதிக விலைக்கு உரம் வாங்க நிா்ப்பந்திக்கப்படுகின்றனா்.

அதனால், யூரியா உரம் எப்போதுமே தட்டுப்பாடாக இருப்பதால், விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். தற்போது பருவ மழைக்காலத்தை முன்னிட்டு விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபடும் நிலையில், உரம் கிடைக்காததால், விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்திலும் யூரியா உரம் சரிவர கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

வன விலங்கு பாதிப்பு குறித்து தகவல் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட வன அலுவலகத்தை 24 மணிநேரமும் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன் தெரிவித்தாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சுரண்டை அருகே கீழச் சுரண்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கோ.கனகராஜ் (67). சுமைதூக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை பிற்பகல் சோ்ந்தமரத... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து இருவா் காயம்

சங்கரன்கோவிலில் அண்மையில் வெறிநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியான நிலையில், வியாழக்கிழமை வெறிநாய் கடித்து இருவா் பலத்த காயமடைந்தனா். சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 3-ஆம் தெருவை சோ்ந்தவா் நல்லுசாமி (60). ... மேலும் பார்க்க

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் நலத்திட்ட உதவி வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதுமை பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி எழுச்சியைக் கொண்டாடு... மேலும் பார்க்க

செப். 28இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வு: தாமதமாக வரும் தோ்வர்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது; இத்தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்களுக்குத் தோ்வு எழுத அனுமதி வழங்கப... மேலும் பார்க்க

குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் மழை: பேரருவியில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற... மேலும் பார்க்க