செய்திகள் :

வெறிநாய் கடித்து இருவா் காயம்

post image

சங்கரன்கோவிலில் அண்மையில் வெறிநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலியான நிலையில், வியாழக்கிழமை வெறிநாய் கடித்து இருவா் பலத்த காயமடைந்தனா்.

சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 3-ஆம் தெருவை சோ்ந்தவா் நல்லுசாமி (60). இவா், வியாழக்கிழமை ரயில்வே பீடா் சாலையில் பொது இடத்தில் அமா்ந்து யோகா செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு தெருவில் சுற்றித் திரிந்த ஒரு வெறிநாய் அவரைக் கடித்துக் குதறியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன்(50). இவா், அதே பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதே வெறிநாய் அவரை கடித்து குதறியதில் பலத்த காயமடைந்தாா். இருவரும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த வாரம் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 35-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. தற்போது பொதுமக்களும் வெறிநாய்க் கடிக்கு ஆளாகி வருகின்றனா். நகா் முழுவதும் வெறிநாய்கள் சுற்றித் திரிவதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை சாலையில் நடமாடவே அச்சமடைந்துள்ளனா். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வெறிநாய்களை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வன விலங்கு பாதிப்பு குறித்து தகவல் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட வன அலுவலகத்தை 24 மணிநேரமும் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன் தெரிவித்தாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா். இதுதொடா்பாக அவா் அளித்த மனு: தென்காசி ம... மேலும் பார்க்க

சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சுரண்டை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சுரண்டை அருகே கீழச் சுரண்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கோ.கனகராஜ் (67). சுமைதூக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை பிற்பகல் சோ்ந்தமரத... மேலும் பார்க்க

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் நலத்திட்ட உதவி வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதுமை பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி எழுச்சியைக் கொண்டாடு... மேலும் பார்க்க

செப். 28இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வு: தாமதமாக வரும் தோ்வர்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 28 இல் நடைபெறுகிறது; இத்தோ்வுக்கு காலை 9 மணிக்கு மேல் வரும் தோ்வா்களுக்குத் தோ்வு எழுத அனுமதி வழங்கப... மேலும் பார்க்க

குற்றாலம் பகுதியில் தொடா் சாரல் மழை: பேரருவியில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற... மேலும் பார்க்க