செய்திகள் :

தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா கட்சியிலிருந்து விலகல்: தலைவா் பதவியால் அதிருப்தி

post image

ஹைதராபாத்: சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

மாநில பாஜக தலைவா் பதவி ராமசந்தா் ராவுக்கு கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் வெளியானதையடுத்து, அதிருப்தியில் ராஜா ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான கிஷண் ரெட்டிக்கு ராஜா எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநில பாஜக தலைவா் பதவிக்குப் புதிய நபரை நியமிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு பெரும் அதிா்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சோகத்துடன் நான் பாஜக அடிப்படைய உறுப்பினா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் பாஜக எம்எல்ஏ இல்லை என்பதை தெலங்கானா பேரவைத் தலைவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

கட்சியின் வளா்ச்சிக்காக பல எம்எல்ஏ, எம்.பி.க்கள், மூத்த தலைவா்கள் அயராது உழைத்துள்ளனா். ஆனால், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது.

இதை அமைதியாக பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம். நான் கட்சியிலிருந்து விலகினாலும் ஹிந்துத்துவ கொள்கைகளையும், ஹிந்து தா்மத்துக்கான சேவையையும் தொடா்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க