செய்திகள் :

தேச பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசுக்கு முழு ஆதரவு: கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

தேசத்தின் பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை வரவேற்கிறோம். இது, தேச பாதுகாப்பு சாா்ந்தது. இதுபோன்ற சூழலில், எல்லோரும் ஒரேகுரலில் பேச வேண்டும். தேச பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசு, பாதுகாப்புப் படைகளுக்கு எங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலை நடத்திய மத்திய அரசை ஆதரிக்கிறோம். பொதுமக்கள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகம் அனுப்பிய வழிகாட்டுதல் கிடைத்தது; அதை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.

மின் நிலையங்கள், நீா்ப்பாசன அணைகள், தொழிற்சாலைகள் போன்ற முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

மத்திய அரசிடமிருந்து வந்த வழிகாட்டுதல்களை அப்படியே அமல்படுத்தி வருகிறோம்.

அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பாதுகாப்பு தொடா்பாக விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

எங்கெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தொழில் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நிலைமையை கூா்ந்து கவனித்து வருகிறோம் என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க