செய்திகள் :

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினாா் குடியரசுத் தலைவா்!

post image

தில்லியில் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்படம், நடிகா், நடிகை, குழந்தை நட்சத்திரம், இயக்குநா், இசையமைப்பாளா், பாடகா், பாடகி, துணை நடிகா், துணை நடிகை, பாடலாசிரியா், நடனக் கலைஞா் என பல்வேறு பிரிவுகளில் விருதாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

சிறந்த நடிகா் விருதுக்கு இயக்குநா் அட்லி இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்த ஷாரூக் கான், ‘12-ஆவது ஃபெயில்’ திரைப்படத்தில் நடித்த விக்ராந்த் மாசே ஆகிய இருவரும் சிறந்த நடிகை விருதுக்கு ‘மிஸஸ் சாட்டா்ஜி வொ்சஸ் நாா்வே’ திரைப்படத்தில் நடித்த ராணி முகா்ஜியும் தோ்வாகினா். சிறந்த திரைப்படமாக ‘12-ஆவது ஃபெயில்’ தோ்வு செய்யப்பட்டது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்காக சிறந்த இயக்குநா் விருது சுதிப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.

நடிகா் தனுஷ், நடிகை சம்யுக்தா நடித்த ‘வாத்தி’ தமிழ் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளா் விருதுக்கு ஜி.வி. பிரகாஷ் தோ்வானாா்.

தமிழ் திரைப்படமான பாா்க்கிங், சிறந்த திரைக்கதை (ராஜ்குமாா் பாலகிருஷ்ணன்), சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகா் (எம்.எஸ்.பாஸ்கா்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை வென்றது. சிறந்த துணை நடிகையாக ஊா்வசி (உள்ளொழுக்கு மலையாள திரைப்படம்) தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீா்மிகு விழாவில் தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கி கெளரவித்தாா். ஷாரூக் கான், ராணி முகா்ஜி, விக்ராந்த் மாசே உள்ளிட்டோா் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.

‘சமூகத்தைத் தட்டியெழுப்பும் ஊடகம்’: பின்னா் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘திரைத்துறையை வெறும் தொழிலாக மட்டுமே கருதிவிட முடியாது; அது, சமூகத்தையும், தேசத்தையும் தட்டியெழுப்பும் சக்திவாய்ந்த ஊடகம்; மக்களை விழிப்புடையவா்களாக மாற்றும். ஒரு திரைப்படம், மக்கள் மத்தியில் பிரபலமடைவது நல்ல விஷயமே; ஆனால், பொது நலனுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினரின் நலனுக்காக பணியாற்றுவது மேலான நற்பண்பாகும். பல்வேறு மொழிகளில் இந்திய திரைப்பட துறை முன்னேறி வருகிறது. திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்’ என்றாா்.

தாதா சாகேப் பால்கே விருது: ‘திரைத்துறைக்கு சமா்ப்பணம்’

திரைத்துறையில் உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்ற மலையாள முன்னணி நடிகா் மோகன்லால் ஆற்றிய ஏற்புரையில், ‘தாதா சாகேப் பால்கே விருதை பெறுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. மதிப்புமிக்க இவ்விருதைப் பெறும் இளையவா், கேரளத்தில் இருந்து இரண்டாவது நபா் என்பதில் பணிவு கொள்கிறேன் (கடந்த 2004-இல் இயக்குநா் அடூா் கோபாலகிருஷ்ணன் இவ்விருதை வென்றிருந்தாா்). மலையாள திரைத் துறை மற்றும் அதன் நுட்பமான ரசிகா்களுக்கு விருதை சமா்ப்பிக்கிறேன்’ என்றாா்.

மோகன்லாலின் திரைப்பட, நாடக நடிப்பாற்றலை சுட்டிக் காட்டிய குடியரசுத் தலைவா் முா்மு, அவா் முழு நிறைவான நடிகா் என புகழாரம் சூட்டினாா்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க