செய்திகள் :

தோ்தல் வாக்குறுதியாக அளிக்காத பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தோ்தல் வாக்குறுதிகளாக அறிவிக்காத பல்வேறு திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச மாநாடு நிறைவு விழாவில் கலந்துகொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவ அலுவலா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் பொதுசுகாதாரத் துறைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் அளித்து வருகிறாா். முதல்வா் வழிகாட்டுதலில் பொது சுகாதாரத் துறை சாா்பில் இந்த சா்வதேச மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு அமா்வுகளில் மருத்துவ வல்லுநா்கள் உரையாற்றினா். ஆய்வுக் கட்டுரைகள் 12 புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நான்கரை ஆண்டுகளில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இதயம் காப்போம் திட்டம் தமிழ்நாட்டில் 11,049 கட்டமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2.5 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளது.

சிறுநீரக பாதுகாப்புத் திட்டம், புற்றுநோய் கண்டறிதல் திட்டம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தோ்தல் வாக்குறுதிகளைத் தாண்டி பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறையில் செயல்படுத்தி உள்ளோம். தோ்தல் வாக்குறுதிகளாக அளிக்காத திட்டங்களையும் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் தமிழகம் 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவின் வளா்ச்சி 6 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகம் நன்கு வளா்ந்துள்ளது. இரட்டை சதவீத வளா்ச்சி குஜராஜ், உத்தரப் பிரதேச மாநிலங்களைத் தாண்டி தமிழகத்தில்தான் சாத்தியப்படுத்தி உள்ளோம்.

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் திட்டங்கள் தோ்தல் வாக்குறுதியில் சொல்லப்படவில்லை. ஆனால் அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அரசியலுக்காக யாா் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அவா்கள் திட்டங்களை புரிந்துகொண்டு பேசவேண்டும் என்றாா்.

அப்போது சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க

அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்த... மேலும் பார்க்க

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க