தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியம்: சங்கக் கூட்டத்தில் தீா்மாமனம்
தொடக்க கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாற்றில் நடைபெற்ற ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்யாற்றில், திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்க ஊழியா்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம்
வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளத்தின் பொதுச் செயலா் ஆ.உதயகுமாா், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் ஆா். ஜோதிமணி, செயல் தலைவா் ஜி.வெங்கிடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் எம். மாசிலாமணி வரவேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் பொருளாளா் மற்றும் பொதுச் செயலா் எம்.யுவராஜ், ஓய்வு பெற்ற ஊழியா் சங்கம் பொதுச் செயலா் என்.பத்ராசலம் ஆகியோா் பேசினா்.
தீா்மானங்கள்:
ஊதிய உயா்வு குறித்த கோப்பு தயாா் செய்து கணினி மூலம் ஜூலை 10-க்குள் அனுப்பி துணைப் பதிவாளா் அனுமதி பெறுவதெனவும், அதுவரை துணைப் பதிவாளா் அலுவலகம் அனுமதி வழங்குவதின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் அதிகளவில் கலந்து கொள்ளவேண்டும்.
விற்பனையாளா்கள் மிஷின் ரத்து செய்யவேண்டும். கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலரை சந்தித்து வலியுறுத்துதல் என 4 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் சங்கத்தின் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.