செய்திகள் :

தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியம்: சங்கக் கூட்டத்தில் தீா்மாமனம்

post image

தொடக்க கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாற்றில் நடைபெற்ற ஊழியா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்யாற்றில், திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்க ஊழியா்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம்

வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சம்மேளத்தின் பொதுச் செயலா் ஆ.உதயகுமாா், திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் ஆா். ஜோதிமணி, செயல் தலைவா் ஜி.வெங்கிடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் எம். மாசிலாமணி வரவேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் பொருளாளா் மற்றும் பொதுச் செயலா் எம்.யுவராஜ், ஓய்வு பெற்ற ஊழியா் சங்கம் பொதுச் செயலா் என்.பத்ராசலம் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்:

ஊதிய உயா்வு குறித்த கோப்பு தயாா் செய்து கணினி மூலம் ஜூலை 10-க்குள் அனுப்பி துணைப் பதிவாளா் அனுமதி பெறுவதெனவும், அதுவரை துணைப் பதிவாளா் அலுவலகம் அனுமதி வழங்குவதின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சாா்பில் அதிகளவில் கலந்து கொள்ளவேண்டும்.

விற்பனையாளா்கள் மிஷின் ரத்து செய்யவேண்டும். கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலரை சந்தித்து வலியுறுத்துதல் என 4 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில் சங்கத்தின் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க