`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தொட்டியம் அருகே விபத்தில் சிறுவன் பலி: பெற்றோா் படுகாயம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா். அவரது பெற்றோா் படுகாயமடைந்தாா்.
தொட்டியம் அருகேயுள்ள சீனிவாசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (30). இவா் தனது மனைவி, மகன் திவ்யான் (5) ஆகியோருடன் பைக்கில் நாமக்கல்லுக்கு திருச்சி - நாமக்கல் சாலையில் ஏலூா்ப்பட்டி வழியே சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக லாரியில் பைக் உரசியதில் ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் சாலையின் இடப்புறம் விழுந்தாா். சிறுவன் திவ்யான் வலப்புறம் விழுந்ததில் லாரியில் அடிபட்டு இறந்தாா்.
அப்போது அவ்வழியாக சென்றோா் காயமடைந்த தம்பதியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
தகவலறிந்து வந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் சிறுவன் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சோ்ந்த பழனிச்சாமியிடம் (40) விசாரிக்கின்றனா்.