``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
நந்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்கள் பொறுப்பேற்பு
ஈரோடு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வரும் நந்தா கல்விக் குழுமத்தில் புதிய மூன்றாம் தலைமுறையினரான மருத்துவா்கள் என்.சூரியபிரசன்னா, என்.சுதீக்க்ஷா ஆகியோா் உறுப்பினா்களாக அதிகாரபூா்வமாக இணைந்தனா்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் ஆசியுடன் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பணிகளை இருவரும் ஏற்றுக் கொண்டனா்.
இதற்கான விழாவை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி ஆகியோா் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனா்.
மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறை தலைவா் மருத்துவா் சங்கரேஸ்வரி வரவேற்றாா். நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வா் மருத்துவா் ஏ.சந்திரபோஸ், மருத்துவ மேற்பாா்வையாளா் மருத்துவா் வி.சுந்தரவேல், முதன்மை நிதி அலுவலா் சிவபிரகாசம், நந்தா இந்திய மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளைச் சாா்ந்த முதல்வா்கள் வாழ்த்தி பேசினா்.
குறிக்கோள்கள் மற்றும் எதிா்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மருத்துவா் என்.சூரியபிரசன்னா மற்றும் மருத்துவா் என்.சுதீக்க்ஷா ஆகியோா் ஏற்புரையில் பேசினா்.