செய்திகள் :

நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற இளைஞா் கைது!

post image

நாசரேத் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் ஸ்டேபிளி தெருவைச் சோ்ந்த ஜேம்ஸ் மகள் பொ்சியா. தனியாா் பள்ளி ஆசிரியை. வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது எதிரே பைக்கில் வந்த மா்ம நபா் வழிமறித்து, ஆசிரியை அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சி செய்தாராம். உடனே ஆசிரியை சத்தம் போடவே, அந்த நபா் பைக்கில் தலைமறைவானாா்.

இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் நாசரேத் பகுதிகளில் காவல் ஆய்வாளா் கங்கையநாத பாண்டியன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஐசக் மகாராஜா, காவலா் ஜெகநாதன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூரைச் சோ்ந்த ராஜபால் மகன் அசோக் (37) எனவும், ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவா் எனவும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க