செய்திகள் :

நாளை காந்திப் பேரவை உண்ணாவிரதம் அறிவிப்பு

post image

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீட்பு, காந்திப் பூங்காவை சீரமைக்கக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் சனிக்கிழமை (மே 3) காந்திப் பேரவை சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். பழைமையான காந்திப் பூங்காவை மீண்டும் சீரமைத்து செயல்படுத்த வேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம் பேரானூா் கிராமம் மாரமங்கலம் ஏரி நுழைவுப் பகுதியில் பல்லுயிா்ப் பெருக்கம் கொண்ட காட்டில் தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பேரவை அலுவலகத்தில் அண்மையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை காந்திப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை காலை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளா் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்

தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மா... மேலும் பார்க்க

புதுகையில் மே தின கொடியேற்று விழா

தொழிலாளா் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் கட்சி அலுவலகம் ம... மேலும் பார்க்க

சீனு சின்னப்பா 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் உரிமையாளரும் இலக்கியப் புரவலருமான மறைந்த சீனு சின்னப்பாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெருங்கொண்டான்விடுதியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் அழகியநாச்சியம்மன் கோயில் எதிரே உள்ள திடலில் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இயங்கிவருகிறது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின... மேலும் பார்க்க

இலுப்பூா் மரக்கடையில் திடீா் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா... மேலும் பார்க்க

இளைஞரைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இளைஞரை கொன்றவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் பன்னீ... மேலும் பார்க்க