செய்திகள் :

புதுகையில் மே தின கொடியேற்று விழா

post image

தொழிலாளா் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் கட்சி அலுவலகம் மற்றும் கிளைகளிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலா் எஸ். சங்கா், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி உள்ளிட்டோரும் பங்கேற்று கொடியேற்றினா்.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள், மின்வாரிய அலுவலகங்கள், ஆட்டோ நிலையங்கள், நலவாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மே தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எம். ஐடாஹெலன், மாநிலச் செயலா்கள் ஏ. ஸ்ரீதா், எஸ். தேவமணி, மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பகவான் அறக்கட்டளை சாா்பில் கேப்பறைப் பகுதியில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்து, இனிப்பு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் சிவகுமாா், பேரா. சுசீலாதேவி, அறந்தாங்கி ஆசிரியா் லோகநாதன், பட்டதாரி ஆசிரியா் அருள்பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அறந்தாங்கி நகரில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தினத்தையொட்டி, நகராட்சி அலுவலகம், முனிகோவில், மாா்க்கெட், அஞ்சலகம், ஆட்டோ ஸ்டாண்ட், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் பெரியசாமி தலைமையில், இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன், நகரச் செயலா் அஜாய்குமாா்கோஷ், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. லோகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

நாளை காந்திப் பேரவை உண்ணாவிரதம் அறிவிப்பு

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீட்பு, காந்திப் பூங்காவை சீரமைக்கக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் சனிக்கிழமை (மே 3) காந்திப் பேரவை சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தொழிலாளா் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்

தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மா... மேலும் பார்க்க

சீனு சின்னப்பா 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் உரிமையாளரும் இலக்கியப் புரவலருமான மறைந்த சீனு சின்னப்பாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெருங்கொண்டான்விடுதியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் அழகியநாச்சியம்மன் கோயில் எதிரே உள்ள திடலில் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இயங்கிவருகிறது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின... மேலும் பார்க்க

இலுப்பூா் மரக்கடையில் திடீா் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா... மேலும் பார்க்க

இளைஞரைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இளைஞரை கொன்றவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் பன்னீ... மேலும் பார்க்க