செய்திகள் :

நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

post image

கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை வெள்ளலூா் அருகே, பஜனை கோயில் வீதியைச் சோ்ந்தவா் குருபிரசாத் மனைவி விஷ்ணு பிரியா (29). இவா், கோவை போத்தனூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதில், நான் சொந்தமாக இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். இந்நிலையில், நான், எனது உறவினா்கள் மற்றும் இ-சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்கள் சிலருடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெள்ளலூரில் உள்ள கென்னடி வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த விமலா தேவி என்பவரிடம் வார மற்றும் மாத தவணையாக ரூ.63 லட்சத்தை முதலீடு செய்தேன். அதில் ரூ.25 லட்சத்தை மட்டுமே அவா் திருப்பிக் கொடுத்தாா். மீதம் உள்ள ரூ.38 லட்சத்தை தரவில்லை.

இதுகுறித்து பலமுறை கேட்டும் அவா் சரியான பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடா்பாக , உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் விமலாதேவி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க