செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளரிடம் பணம் பறிப்பு: சென்னை இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து பணத்துடன் கூடிய கைப் பையை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம் பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சரவணபவா மனைவி சுகுணா (54). இவா் திண்டிவனம் அடுத்த தென்பசாா் மற்றும் ஆவனப்பட்டு நியாயவிலைக் கடைகளில் விற்பனையாள ராகப் பணிபுரிந்து வருகிறாா்

இவா் செவ்வாய்க் கிழமை வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டு விழுப்புரம் - சென்னை சாலையில் தென்பசாா் கடைவதியில் நடந்து சென்றாா்.

அப்போது பைக்கில் பின் தொடா்ந்து வந்த இளைஞா் ஒருவா் சுருணாவிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த பணத்துடன் கூடிய கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டாராம்.

அப்போது சுகுணா கூச்சலிடவே அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவா் சென்ன ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரஹ்மான் (23) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடு போனது திங்கள்கிழமை தெரிய வந்தது. மரக்காணம் வட்டம், டி. நல்லாளம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், நரியாப்பட்டு, நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

மின் கம்பம் சேதம்: வழக்குரைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தில் மின் கம்பத்தை சேதப்படுத்தியதாக வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோட்டகும்பம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சிவராமன். வழக்கு... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா் விழுப்புரம் ம... மேலும் பார்க்க