செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருமைக் கண்ணன் மனைவி ராகினி (43). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த ராகினி திங்கள்கிழமை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராகினியை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்த போது ராகினி ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடு போனது திங்கள்கிழமை தெரிய வந்தது. மரக்காணம் வட்டம், டி. நல்லாளம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், நரியாப்பட்டு, நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

மின் கம்பம் சேதம்: வழக்குரைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தில் மின் கம்பத்தை சேதப்படுத்தியதாக வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோட்டகும்பம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சிவராமன். வழக்கு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளரிடம் பணம் பறிப்பு: சென்னை இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து பணத்துடன் கூடிய கைப் பையை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா் விழுப்புரம் ம... மேலும் பார்க்க