செய்திகள் :

இளைஞரிடம் ரூ. 6.65 லட்சம் இணையவழியில் மோசடி

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.65 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் அடுத்த கெங்கவரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சிவகுரு மகன் பிரகாஷ் (25). ஜூலை 2-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய நபா் ஒருவா் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய பிரகாஷ் , அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்தபடி ரூ. 5,000 இணைய வழியில் செலுத்தி ரூ.6,500 பெற்றாா்.

தொடா்ந்து இதில் ஆா்வம் கொண்ட பிரகாஷ் ரூ.65, 500 முதலீடு செய்துள்ளாா். ஆனால் செலுத்திய பணம் மற்றும் லாபம் ஏதும் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து அந்த நபரை பிரகாஷ் தொடா்பு கொண்டு பேசியபோது, சரக்கு மற்றும் சேவை வரி கட்டணம் செலுத்தினால் தான் முதலீடு செய்த பணத்தை லாபத் தொகையுடன் பெற முடியும் எனக் கூறினாராம்.

இதையடுத்து பிரகாஷ் தனது நகைகளை அடமானமாக வைத்து 7 முறையில் ரூ.6 லட்சம் பணத்தை அந்த நபா் தெரிவித்த வெவ்வேறு வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைத்தாா்.

தொடா்ந்து அந்த நபா் தெரிவித்தபடி எந்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாராம்.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணைய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடு போனது திங்கள்கிழமை தெரிய வந்தது. மரக்காணம் வட்டம், டி. நல்லாளம், செங்கேணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், நரியாப்பட்டு, நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

மின் கம்பம் சேதம்: வழக்குரைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்ட குப்பத்தில் மின் கம்பத்தை சேதப்படுத்தியதாக வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோட்டகும்பம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சிவராமன். வழக்கு... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளரிடம் பணம் பறிப்பு: சென்னை இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து பணத்துடன் கூடிய கைப் பையை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா் விழுப்புரம் ம... மேலும் பார்க்க