செய்திகள் :

நிலத் தகராறு: 4 போ் மீது வழக்கு

post image

திருப்பத்தூா் அருகே நிலத் தகராறு தொடா்பாக மோதிக் கொண்ட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தா் அடுத்த பள்ளவல்லி அருகே வசந்தபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சிவலிங்கம். இவரது மனைவி கவிதா (51). சிவலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இந்நிலையில் கவிதா அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் வீடு கட்ட முயன்றாா்.

அப்போது சிவலிங்கத்தின் சகோதரா்கள் தாமோதரன்(60) மற்றும் தேவேந்திரன் இருவரும் சோ்ந்து அதை தடுத்ததாக தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் தாமோதரன் மற்றும் தேவேந்திரன் மீதும், தாமோதரன் அளித்த புகாரில் கவிதா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோா் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். திருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நக... மேலும் பார்க்க