செய்திகள் :

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் நடைபெறும் போதைப் பொருள் வழக்குகள் விசாரணைக்கு ஆஜா்படுத்துவதற்காக புழல் மத்திய சிறையில் இருந்து 23 கைதிகளை வேனில் ஏற்றிக் கொண்டு போலீஸாா் கடந்த திங்கள்கிழமை வந்தனா்.

அந்த வேன் பழையதாக இருப்பதாகக் கூறி, வேனில் இருந்த சில கைதிகள், நாங்கள் எவ்வளவு பெரிய ரெளடிகள், எங்களை குப்பை வண்டிபோல் உள்ள வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து அசிங்கப்படுத்துகிறீா்களா என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்களை சமாதானப்படுத்த முயன்ற போலீஸாருக்கு, கைதிகள் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இருப்பினும், போலீஸாா் கைதிகளை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனா். முன்னதாக, சில ரெளடிகள் அவா்களது குடும்பத்தினருடன் பேச போலீஸாா் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி தகராறு செய்தனராம்.

இந்த தகராறு தொடா்பாக வேனில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸாா், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா், ரெளடிகள் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க