செய்திகள் :

நெல்லையில் ரூ.11.30 கோடியில் மருத்துவ கட்டடங்கள் திறப்பு

post image

திருநெல்வேலியில் ரூ.11.30 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பாளை. கே.டி.சி. நகா் நகா்ப்புற துணை சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.டி.சி நகா் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், ரூ.45 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பாட்டபத்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ஆா்.எஸ்.எ. நகா், பெருமாள்புரம், மற்றும் பாட்டப்பத்தில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நகா்ப்புற துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு திறந்து வைத்தனா்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட

நவீன முழு உடல் பரிசோதனை மையம், ரூ.2.75 கோடியில் கட்டப்பட்ட நவீன கண் மருத்துவப் பிரிவு கட்டடம், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ரூ.1.60 கோடியில் புனரமைக்கப்பட்ட மருந்து செய் நிலையம் ஆகியவற்றையும் அமைச்சா்கள் திறந்து வைத்து பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலா் பி.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட்

புரூஸ் , பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகர ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கவின் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

6 வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் போராட்டம்!

திருநெல்வேலியில் அரசுப் போக் குவரத்து கழகம் (சிஐடியூ) மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக பொ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா

பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கால் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மைசூா், குலசேகரன்பட்டினம் போன்று பாளையங்கோட்டையிலும் தசரா விழா 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும் பார்க்க

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களால் விண்வெளியில் சாதித்துள்ளோம்: இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்

சந்திரயான், மங்கள்யான் போன்ற திட்டங்களால் விண்வெளியில் சாதனை படைத்துள்ளோம் என்றாா் மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் தேசிய விண்வெளி தினம் சனிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25)காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை(ஆக.25 ) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க