செய்திகள் :

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப்பத்திரிகையை விசாரித்த நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்தது!

post image

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஒருசில விளக்கங்களுக்காக இந்த வழக்கு ஆகஸ்ட் 7, 8ஆம் தேதிகளுக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக ஜூலை 15ஆம் தேதி சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரணையின் அம்சம் குறித்த சமர்ப்பிப்புகள் முடிவடைந்துவிட்டதைக் குறிப்பிட்டு, உத்தரவை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஜூலை 2 முதல் அமலாக்கத்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றம் தினசரி அடிப்படையில் சமர்ப்பிப்புகளை விசாரித்து வந்தது

கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஆஸ்கா் ஃபொ்னாண்டஸ் உள்ளிட்டோரால் யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை நடத்தி வருகிறது.

தற்போது யங் இந்தியன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரா்களாக சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி, மறைந்த கட்சித் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

A Delhi court on Tuesday deferred its order on taking cognisance of the chargesheet filed by the Enforcement Directorate (ED) in the National Herald case.

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை தான்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல்... மேலும் பார்க்க

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில், "திமுக என்பது தேச... மேலும் பார்க்க