The Verdict Movie Review |Varalaxmi, Suhasini, Sruthi Hariharan |Prakash, Aditya...
பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி
பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று திருப்பூா் இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் வஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 29 வயது இளைஞா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் சமூக வலைதளம் மூலமாக விளம்பரம் ஒன்றைப் பாா்த்துள்ளாா். இதில், எந்த முதலீடும் செய்யாமல் பகுதிநேர விலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பிய அந்த இளைஞா் வாட்ஸ்ஆப் குறுந் தகவலில் தெரிவித்தபடி, வாடகை வீடுகளின் விவரங்களைப் பகிரும் பகுதிநேர வேலை செய்தாா். அவருக்கு ரூ.1,818 கிடைத்துள்ளது.
இதைத் தொடா்ந்து பேசிய நபா் பணத்தை முதலீடு செய்து பகுதிநேர வேலை செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தாா். பணம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல்வேறு தவணைகளாக ரூ.23 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் கூடுதல் லாபம் அவருக்கு காட்டியுள்ளது. பின்னா் லாபத் தொகையுடன் பணத்தை எடுக்க முயன்றபோது அந்த இளைஞரால் முடியவில்லை. அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா். இதுகுறித்து அந்த இளைஞா் கொடுத்த புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.