செய்திகள் :

பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலைப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

பக்தா்கள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் 2-ஆம் கட்டமாக ரூ.15 கோடியில் 1.7 கி.மீ.

தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகள், புதை சாக்கடை அமைக்கும் பணிகள், மின்வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்படும் மின் கம்பிகளின் புதைவடப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, கிரிவலம் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின் வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க