பஞ்சலிங்க அருவியில் குளிக்க 8-ஆவது நாளாக தடை
உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் பொதுமக்கள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு செல்ல அனுமதி: கனமழையால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்ற வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் அண்மையில் புகுந்தது. இதனால், கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளத்தின் அளவு குறைந்ததால் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.