செய்திகள் :

பஞ்சலிங்க அருவியில் குளிக்க 8-ஆவது நாளாக தடை

post image

உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

உடுமலை அருகேயுள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்கம் அருவியில் பொதுமக்கள் குளிக்க 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், திருமூா்த்திமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்கு செல்ல அனுமதி: கனமழையால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்ற வெள்ளம் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் அண்மையில் புகுந்தது. இதனால், கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளத்தின் அளவு குறைந்ததால் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

வெள்ளக்கோவிலில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணி

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையம் சாா்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் பருமன், இதயம் காப்போம், உடற்பயிற்சி, புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்டவை குறித்தும் விளக்கும் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது

பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூா் மாநகரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடிகம்பம் பகுதி டாஸ்மாக் மதுபானக் கூடம் அருக... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்று சடலத்தை நொய்யலில் வீசிய தொழிலாளி

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்து சடலத்தை நொய்யல் ஆற்றில் தொழிலாளி வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகள் அமுதா (39). ... மேலும் பார்க்க

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க