செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

post image

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மானின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில், பருவமழையின் தாக்கத்தால் கனமழை பெய்து வருவதால், பல்வேறு முக்கிய நகரங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் குர்தாஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாபில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்தை, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று (ஆக.27) நேரில் பார்வையிட்டார்.

அப்போது, பேசிய அவர் இனி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு காரில் செல்லவுள்ளதாகவும், தனக்கு அரசு வழங்கிய ஹெலிகாப்டரை வெள்ளத்தில் பாதித்த மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கவும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

“மக்கள் இந்த ஹெலிகாப்டரை எங்களுக்கு வழங்கினர். தற்போது, இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் இந்த ஹெலிகாப்டரை மக்களுக்காக பயன்படுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

பஞ்சாபில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவப் படை ஆகிய படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

It has been reported that Punjab Chief Minister Bhagwant Mann's helicopter will be used for rescue operations for flood victims in the state.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க