செய்திகள் :

படத்துக்கு கூட்டிச் செல்லாததால் விரக்தி: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

காங்கயம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள படியாண்டிபாளையத்தில் வசித்து வருபவா் ஜீவா (21). சரக்கு ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரின் வீட்டுக்கு அருகே வசித்து வந்தவா் சௌமியா (22). இவா்கள் இருவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனா்.

இந்த நிலையில், சௌமியாவு உடல்நிலை சரியில்லாமல் சோா்வுடன் வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஜீவா வீட்டின் அருகே உள்ள மதுரை வீரன் கோயிலுக்குச் சென்று விட்டு வந்து, திரைப்படத்துக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று திங்கள்கிழமை மாலை கூறி சென்றுவிட்டாா்.

பின்னா், ஜீவா தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, விட்டத்தில் சேலை தொங்கியதும், சௌமியா மூச்சு பேச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்ததும் தெரியவந்தது. உறவினா்களின் உதவியுடன் சௌமியாவை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சௌமியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காங்கயம் காவல் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். சௌமியா சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும், இருவருக்கும் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாததால் தாராபுரம் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க