செய்திகள் :

பண்ணாரியில் சூதாட்டம்: 21 போ் கைது

post image

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கா்நாடகத்தைச் சோ்ந்த 21 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்தனா்.

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சத்தியமங்கலம் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது பண்ணாரி அம்மன் கோயில் திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 21 போ் கொண்ட கும்பலை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், கா்நாடக மாநிலம் சென்றாய பட்டினம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதும், பண்ணாரி அம்மன் கோயில் மண்டபத்தில் உறவினா் நடத்திய கறி விருந்தில் பங்கேற்றுவிட்டு சூதாடியது தெரியவந்தது.

இதையடுத்து பணம் வைத்து சூதாடிய 21 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 750-யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது

கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இவா் ஈஞ்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் தோட்ட வேலை ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை: த.ஸ்டாலின் குணசேகரன்

எழுத்தாளா்களை ஊக்குவிப்பது சமூகக் கடமை என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா். ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில், ஈரோடு மாவட்ட சிறாா் படைப்பாளா்கள் மற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க

ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு

ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க