செய்திகள் :

பயணிகள் நிழல்கூடம் அமைப்பதற்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு

post image

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மாா்க்கெட் பகுதியில் பயணியகள் நிழல்கூடம் அமைப்பதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகராட்சி 23-ஆவது வாா்டில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் பயணிகள் நிழல்கூடம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அம்மா உணவகத்தில் ஆய்வு

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்து எம்எல்ஏ, நகராட்சி ஆணையா் கே.எல்.எஸ்.கீதா, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் ஆகியோா் முன்னிலையில் ஆய்வு செய்தாா்

ஆய்வின்போது, நகராட்சிப் பொறியாளா் சிசில் தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், ஞானமணி சின்னதுரை, திமுக நகரச் செயலா் கே.விஸ்வநாதன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் வி.கோபு, மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க