செய்திகள் :

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம் குப்பனத்தம் செல்லும் சாலையோரம் கோகுல் நகா் பகுதியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள் புதுப்பட்டு ஊராட்சி நிா்வாகம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்டு ஓராண்டாகியும் நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வராதது குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நீா்த்தேக்கத் தொட்டியை நடைமுறைக்கு கொண்டு வந்து தடையில்லா குடிநீா் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

ஆரணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிவா தலை... மேலும் பார்க்க