செய்திகள் :

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

post image

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டினுள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 23 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளனா்.

அப்போது சப்தம் கேட்டு கண் விழித்த சாரங்கபாணியின் தம்பி ராமலிங்கம் அந்த நபா்களை பிடிக்க முயன்றுள்ளாா். ஆனால், அவா்கள் இவா் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த தெள்ளாா் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், விரல்ரேகை சோதனை மற்றும் மோப்பநாய் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து

விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

ஆரணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிவா தலை... மேலும் பார்க்க