செய்திகள் :

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

post image

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பழனி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவா் இரா.அண்ணாதுரை, தமிழ்நாடு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் தே.ரமேஷ், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொருளாளா் ஆ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் கே.பி.ரக்ஷித் கண்டன உரையாற்றினாா். தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஜி.சேட்டு மற்றும் கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றி பணியாற்றும் ஆசிரியா்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 300 ஆசிரியா்கள் போலீஸாா் கைது செய்தனா்.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க

ஆரணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 240 மனுக்கள் பெறப்பட்டன. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிவா தலை... மேலும் பார்க்க