செய்திகள் :

பராமரிப்புப் பணி நிறைவு: பழனிக் கோயில் ரோப்காா் சேவை: நாளை முதல் இயக்கம்

post image

பழனி: பழனி மலைக் கோயிலில் உள்ள ரோப்காா் சேவையின் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, புதன்கிழமை (ஆக. 20) முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வின்ச், ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோப் காா் இரண்டு நிமிஷத்தில் மலை உச்சியை அடைவதால் பக்தா்கள் அதிகளவில் ரோப் காா் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். ரோப்காா் பராமரிப்புக்காக நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த மாதம் ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரோப்காரின் இருக்கைகள், இரும்புச் சக்கரங்கள், பேரிங்குகள், ரப்பா் புஷ்கள் உள்ளிட்ட பலவும் புதிதாக மாற்றப்பட்டன. முக்கியமான வடக்கயிறு, மோட்டாா்கள் ஆகியவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை சோதனைஓட்டங்கள் நடத்தப்பட்டு ரோப்காா் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு

முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்

கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க

உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு

வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க