செய்திகள் :

’பலாப்பழம் தான் சாப்பிட்டோம்..’ - மது பரிசோதனை முடிவால் பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

post image

கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவின் பந்தளம் கே.எஸ்.ஆர்.டி.சி. டிப்போவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. பலாப்பழம் சாப்பிட்ட பேருந்து ஓட்டுநர் மது அருந்தியதாக பரிசோதனையில் தவறுதலாக முடிவு வந்ததுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வழக்கமான மது பரிசோதனையின்போது, பலாப்பழம் சாப்பிட்ட ஒரு ஓட்டுநர் மது அருந்தியதாக பரிசோதனையில் வந்துள்ளது. பரிசோதனை மீட்டரில் 0-லிருந்து 10 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், தான் மது அருந்தவில்லை என கூறியிருக்கிறார்.

மது பரிசோதனை

என்ன நடந்தது?

ஒரு பேருந்து ஊழியர் தனது வீட்டிலிருந்து பலாப்பழங்களை டிப்போவிற்கு கொண்டு வந்து சக ஊழியர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

பலாப்பழங்களை சாப்பிட்ட மூன்று ஊழியர்களிடம் எடுத்த பரிசோதனையிலும் அவ்வாறு முடிவுகள் வந்துள்ளன. இதையடுத்து, அதிகாரிகள் பரிசோதனை மீட்டரைச் சோதித்தனர்.

ஒரு அதிகாரி முதலில் பரிசோதனை செய்தபோது மீட்டர் 0-ஐ காட்டியது. ஆனால் அவர் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்தபோது மீட்டர் மது அருந்தியதாகக் காட்டியிருக்கிறது.

இறுதியாக, பலாப்பழமே இந்தத் தவறான முடிவுக்கு காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பலாப்பழம் மது பரிசோதனை முடிவுகளைப் பாதிக்கும் என்பது இந்த சம்பவத்தால் தெரியவந்துள்ளது.

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க