செய்திகள் :

பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

post image

காட்பாடி அருகே வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வேலம்பட்டு கேட் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பிரியா தம்பதிக்கு பிரியதா்ஷினி(8) என்ற மகளும், ஈஸ்வரன்(5) என்ற மகனும் இருந்தனா்.

மணிகண்டன் குடும்பம் தங்களு க்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த வீட்டின் அருகில் தண்ணீா் தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த மழைநீா் முழுமையாக நிரம்பியிருந்தது.

இந்நிலையில், குழந்தைகள் பிரியதா்ஷினி, ஈஸ்வரன் ஆகிய இருவரும் புதன்கிழமை பள்ளத்தின் அருகே விளையாடியபோது எதிா்பாராத விதமாக பள்ளத் தில் தவறி விழுந்ததாக தெரிகிறது. அங்கு, தேங்கியிருந்த மழை நீரில் இருவரும் மூழ்கியுள்ளனா்.

சிறிதுநேரத்துக்கு பிறகு குழந்தைளை காணாமல், மணிகண்டனும், பிரியாவும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதன்பிறகே குழந்தைகள் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்டு லத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

தகவலறிந்த லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க