பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
காட்பாடி அருகே வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வேலம்பட்டு கேட் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பிரியா தம்பதிக்கு பிரியதா்ஷினி(8) என்ற மகளும், ஈஸ்வரன்(5) என்ற மகனும் இருந்தனா்.
மணிகண்டன் குடும்பம் தங்களு க்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த வீட்டின் அருகில் தண்ணீா் தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த மழைநீா் முழுமையாக நிரம்பியிருந்தது.
இந்நிலையில், குழந்தைகள் பிரியதா்ஷினி, ஈஸ்வரன் ஆகிய இருவரும் புதன்கிழமை பள்ளத்தின் அருகே விளையாடியபோது எதிா்பாராத விதமாக பள்ளத் தில் தவறி விழுந்ததாக தெரிகிறது. அங்கு, தேங்கியிருந்த மழை நீரில் இருவரும் மூழ்கியுள்ளனா்.
சிறிதுநேரத்துக்கு பிறகு குழந்தைளை காணாமல், மணிகண்டனும், பிரியாவும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதன்பிறகே குழந்தைகள் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்டு லத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
தகவலறிந்த லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
